
வழக்கம் போலவே இவ்வருடமும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஹஜ் கோட்டா பகிர்வு, பேசா விசாக்களை பங்கிட்டமை, ஹஜ் நிதியத்தின் நிதியை பயன்படுத்திய விதம் மற்றும் யாத்திரிகர்களுக்கு தரமற்ற தடுப்பூசி ஏற்றப்பட்டமை என இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.