
ஹஜ் பெருநாள் காலத்தில் குர்பானுக்கான கால்நடைகள் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெறும். இந்நிலையில் மாடுகளை போக்குவரத்து செய்வதற்கான சட்டரீதியான ஆவணங்களிருப்பின் தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து விடுவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.