அரசாங்கத்தின் நிவாரணத்தில் மோசடி – மேன்முறையீடு செய்வதற்கும் வாய்ப்பில்லை – மொட்டுக்கட்சி காட்டம்.! samugammedia

குறைந்த வருமானம் பெறுகின்ற வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான முறையான நிவாரணத்திட்டத்தை அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிவாரணத் திட்டத்தில் உள்வாங்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்படாத தகுதியுடைய குறைந்த வருமானம் உடையவர்கள் இருந்தால், மேல்முறையீடு செய்யலாம் என அரசாங்கம் கூறினாலும் அதற்கு வாய்ப்பில்லை என்று, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கூறுவதாகவும் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சந்திம வீரக்கொடி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *