யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக தேர்தல் நிறைவு – தேர்தல் முடிவுகள் நாளை.! samugammedia

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம்,மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகமானது ஒவ்வொரு முறையும் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற நிலையில் இன்றையதினம் காலை ஆரம்பமான தேர்தல் பிற்பகல் 2 மணியளில் நிறைவடைந்துள்ளது.

தேர்தல் தொடர்பான இறுதி முடிவு நாளையதினம் அறிவிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

நிர்வாகசபை தேர்தலானது மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்றிருந்தது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதீ, யசோதா முன்னிலையில் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *