அமரர் ரவிராஜின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனனதினம் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அதன்போது, யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் சசிகலா ரவிராஜ், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *