மட்/களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

இலங்கையின் தானாக தோன்றிய மூலமூர்த்தியை கொண்டுள்ள ஆலயங்களுல் ஒன்றாகக்  கருதப்படும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்றுக்  காலை ஆயிரக்கணக்னோர் புடை சூழ இடம்பெற்றது.

இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 10 தினங்களும் சிறப்பாக இடம்பெற்றது.ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வி.கு.சிறிஸ்கந்தராஜா குருக்களின் தலைமையில் இடம்பெற்ற உற்சவத்தில் நேற்று முன்தினம்  இரவு ஆலயத்தில் மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் நேற்றுக் காலை விநாயகவழிபாடுகளுடன் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வும்   இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி தீர்த்தக்கேணிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

இத் தீர்த்த உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *