
சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டுவரும் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு மினா மற்றும் அரபா ஆகிய தலங்களில் தங்குவதற்கு போதியளவு கூடாரங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இவ்விரு தலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை யாத்திரிகர்கள் தங்குமிடமின்றி பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

