
சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ள நூற்றாண்டு கால வரலாறு கொண்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணிக்க சிறைச்சாலை உத்தியோக பூர்வ இல்லத்துக்கு பின்னால் 20 பேர்ச் காணி ஒதுக்கித்தரவும், அல்லது பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் 20 பேர்ச் காணி ஒதுக்கித்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மத நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளரைக் கோரியுள்ளது.

