யாழ், குப்பிளான் விவசாயிகளுடன் மைத்திரிபால சிறிசேன விஷேட கலந்துரையாடல்! samugammedia

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெங்காயம் செயற்பாட்டையும் பார்வையிட்டு இயந்திரத்தால் வெங்காயத்தையும் நாட்டினார்.

அத்தோடு மிளகாய் செய்கையை மேற்கொள்ளும் விவசாய தோட்டங்களை பார்வையிட்டு கலந்துரையாடினார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் வெங்காயத்தினை நடுகை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்களும் முன்னாள் ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *