துணுக்காய் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் 28.06, 30.06 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.
இவ்வருடத்தின் துணுக்காய் கோட்ட பாடசாலைகளின் நிலைகளிலே மு/மல்லாவி மத்திய கல்லூரி ஒட்டுமொத்தமாக 446 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் மு/அமைதிபுரம் அ.த.க பாடசாலை, மு/ அனிஞ்சியன்குளம் அ.த. க பாடசாலை, மு/ தென்னியன்குளம் அ.த.க பாடசாலை, மு/ கல்விளான் மகா வித்தியாலயம், மு/ துணுக்காய் அ .த.க பாடசாலை, மு/ கோட்டைக்கட்டிய குளம் அ.த.க பாடசாலை, மு/ தேறாங்கண்டல் அ .த. க பாடசாலை, மு/ ஐயங்கன்குளம் அ.த.க பாடசாலை, மு/ யோகபுரம் மகா வித்தியாலயம், மு/ மல்லாவி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை, போன்ற பாடசாலைகள் போட்டியில் கலந்துகொண்டிருந்தன.