புதிய முத்திரை வெளியீடு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் நடவடிக்கைகளுக்கான 50 ரூபாய் பெறுமதியான புதிய முத்திரை வெளியீட்டு விழா சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் இந்த முத்திரை வெளியிடப்பட்டதுடன் இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட அஞ்சல் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *