கோணக்கலை தோட்ட நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கோணக்கலை தோட்டத்திற்கு இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது தோட்ட தொழிலாளர்களின் அரைச் சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளைன் பெற்றுக் கொடுப்பதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *