இந்திய ரோலர் படகுகளால் வடபகுதி மீன்வளம் அழிவு…!தமிழக முதலமைச்சருக்கு எடுத்துரைக்க நடவடிக்கை..!samugammedia

தமிழ்நாடு மீன்பிடி ரோலர்களால் வடபகுதிக் கடல்வளம் அழிக்கப்படுவது தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைக்கவுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவ தால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் கடல்வளமும் முற்றாக அழிக்கப்படுவதாக மீனவர்களால் கவலை தெரிவிக்கப்படுகிறது.

வடபகுதிக்கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழ்நாடு மீன்பிடி ரோலர்கள் ஒரு தடவையில் சராசரியாக 18 கிலோ மீனை பிடித்துச் செல்கின்றன.

தமிழ்நாடு மீன்பிடி ரோலர்கள் வழித்துத் துடைத்து மீனை அள்ளிச்செல்வதால் வட பகுதி மீனவர்களின் இழப்பு அளவிட முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *