தமிழர்கள் விடயத்தில் இந்தியா காத்திரமான முடிவை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய பிரதமர் மோடிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் குறித்த மகஜர் தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செ.கஜேந்திரன் கையளித்தார்.



