வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு! samugammedia

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மாமுனை பகுதியில், ஒரு தொகை கேரளா கஞ்சா இன்று (19) புதன்கிழமை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

இதன்போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை இவ்வாறு கடற்படையினர் மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை முகாமில் வைத்துள்ள கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *