தமிழர்களுக்கான தீர்வு..! குறுக்குவழியில் சம்பந்தன் குழுவினர் முயற்சி..! பந்துல குற்றச்சாட்டு..!samugammedia

தாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப் பறிக்கலாம் என்று சம்பந்தன் தலைமையிலான குழுவினர் முயல்கின்றனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், இந்தியாவை வைத்து இலங்கையை மிரட்டலாம் என்றும் சம்பந்தன் குழுவினர் எண்ணுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி- தமிழ்த் தேசிய கட்சிகளுடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை இறைமையுள்ள நாடு. எமக்கென்று ஒரு ஜனாதிபதி உள்ளார். அரசாங்கம் உண்டு. பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான பாராளுமன்றமே முடிவு செய்யும் என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *