இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற சம்பவம் – பெண் நியமிப்பு! samugammedia

ஜனாதிபதி வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரது கீழ் அமைச்சுக்களை மேற்பார்வையிட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் காலப்பகுதியில் பணியாற்றுவதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *