சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட ஒருவர் பொலிஸாரினால் கைது! samugammedia

சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணாத்திவில்லு ஆலங்க தோனி கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை முச்சக்கர வண்டிக்கு ஏற்ற முற்பட்ட ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்டு வருவதாக வண்ணாதிவில்லு பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது சுமார் 16 உரைகளில் 500 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடத்தலோடு சம்மந்தப்பட்ட கரைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியன பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஆகியவற்றையும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *