சாகச வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட  மன்னார் இளைஞர், யுவதிகள்

இயற்கையை நேசிக்கவும், இயற்கையுடன் இணைந்து வாழவும் தூண்டும் வகையில் ஷசோ சாகச வனப்பகுதிக்கு கறிற்ராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால்  இளைஞர்கள், யுவதிகள் என 45 பேர் அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

சவுத்பார், வேப்பங்குளம், காத்தான் குளம், மடுறோட் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகளே  இவ்வாறு இரண்டு நாட்கள்  களப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மலை ஏறுதல், குழு விளையாட்டுக்கள், குறி பார்த்துச் சுடுதல், குறிபார்த்து அம்பு எய்தல், ஆகாயக் கம்பியில் தொங்கிச் செல்தல், ஆற்றில் படகோட்டுதல், பூதப்பாதங்களில் நடத்தல், ஒளி இரவு, ஆடல்பாடல் எனப் பல்வேறுபட்ட நிகழ்வுகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *