யாழில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்து- ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகே, சற்றுமுன் விபத்தொன்று இடம்பெறுள்ளது.

இச்சம்பவம், இன்று புதன்கிழமை இரவு 7.40 அளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அப் பகுதியில் வந்த பேருந்தும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதியதில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்றும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *