ஸஹ்ரானின் மனைவியிடம் சிஐடி 6 மணிநேரம் விசாரணை

கொழும்பு,பெப். 16:

தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய பிரதான  பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  கைதுசெய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஸிமின் மனைவி, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குளியாப்பிட்டி நீதவான் ஜனனி விஜேதுங்க அண்மையில் பிறப்பித்த உத்தரவின் பேரில், நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு  பிரவேசித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், ஸஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *