மத்துகமவில் வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி யுவதிக்கு நேர்ந்த சோகம்! பெரும் துயர சம்பவம்….!

வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த 29 வயது யுவதி ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15-02-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில், மதுகம பிரதேச செயலகத்தில் பணி புரியும் அவர் நேற்றைய தினம் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்கு உள்ளானத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மத்துகமவில் இருந்து அலுத்கம நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி, வெலிபன்ன சந்தியில் இருந்து திடீரென பிரதான விதிக்கு பிரவேசித்த கெப் வாகனத்தில் மோதுண்டுள்ள நிலையில் பிரதான வீதிக்கு தூக்கி எறியப்பட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் எதிர்த்திசையில் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் யுவதி மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலிபன்ன பொலிஸாரினால் இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் மதுகம பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *