
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான அணியினர் அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன்,மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து போராட்டம் தொடர்ந்து கொழும்பு புகையிரத நிலையத்திலும் நேற்றைய தினம் யாழ். பஸ் நிலையம் முன்பாகவும் இந்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெற்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கிராமங்கள் தோறும் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.