பாடசாலைக்கு சென்ற காட்டு யானைகள்…! வீட்டுக்கு திரும்பிய மாணவர்கள்…!samugammedia

ஆராச்சிக்கட்டு, குருக்குளிய மகா வித்தியாலயம் இன்று(31) தற்காலிகமாக மூடப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருக்குளிய பகுதிக்குள் இன்று காலை காட்டு யானைகளின் கூட்டம் ஒன்று நுழைந்தது.

இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களினால் பாடசாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து அப்பகுதி மக்களின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *