டீசல் இல்லாமல் இடைநடுவில் நின்ற அமைச்சரின் வாகனம்!

டீசல் இல்லாமல் அமைச்சர் ஒருவரின் வாகனம் இடைநடுவில் நின்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வாவின் வாகனமே இவ்வாறு இடைநடுவில் நின்றுள்ளது.

வெலிமடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில்,

இன்று முழு நாடும் ஸ்தம்பித்துள்ளது. எங்கும் டீசல் இல்லை. நான் பதுளையிலிருந்து வரும்போது டீசல் இல்லை என்று சொன்னார்கள்.

கொழும்பில் இருந்து சரி கொண்டு வரச் சொன்னேன். அரசாங்கம் மட்டுமல்ல, முழு நாடும் இன்று ஸ்தம்பித்துள்ளது.

இன்று முழு நாட்டு மக்களும் ஸ்தம்பித்துள்ள துடன் கடுமையான கொள்கையைக் கடைப் பிடித்து வருகிறோம்.

அரசாங்கம் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை எனவும் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *