நான் புத்தர் சிலையை பார்க்க வேண்டும்…! அம்பிட்டிய சுமணரட்ன தேரர் மீண்டும் அடாவடி…!samugammedia

புத்தர் சிலையை பார்க்க வேண்டும் என தெரிவித்து அம்பிட்டிய சுமணரட்ன தேரர் பொலிஸாருடன் முரண்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பில் அம்பிட்டிய ரத்ன தேரரின் அடாவடி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய அம்பிட்டிய ரத்ன தேரர் மீண்டும் பொலீசாருடன் முரண்பட்டுள்ளார். இதன்போது முரண்பட்ட அவர் “பன்சாலைக்கு செல்வதற்கு தான் உங்களிடம் கேட்டேன் .
என்னை பன்சாலைக்கு போகவிடாமல் பொலிசார் தடுத்தனர்.

நான் காவி உடை அணிந்திருக்கின்றேன்.அப்போ ஏன் என்னை பன்சாலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டீர்கள். அங்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

சாணக்கியனுக்கு பயந்து ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய இராணுவத்தினர், திருட்டுத்தனமாக நேற்று இரவு புத்தர் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.

சிங்கள பன்சாலையை மூடி சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். உலகத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றோம் .

காக்கி சீருடை அணிந்த பொலிஸார் கிழக்கு மாகாணத்தில் எங்களை எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *