போர்க்கால சூழலில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு ! samugammedia

போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களுக்கு மதிப்பளிக்கும்   நிகழ்வு இன்று  முல்லைத்தீவு ஊடக அமையத்தில் தலைவர் சண்முகம் தவசீலன் தவசீலன் தலைமையில்  இடம்பெற்றது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின்  இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு , போர்க்கால ஊடகவியலாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. 

தமிழ் மக்களுக்கான உரிமைப்போர்க் காலப்பகுதியில் தமது உயிரைத் துச்சமென மதித்து ஊடகத்துறை மூலமாக மக்களது அவலங்களையும், உண்மை நிலைமைகளையும் உலகறியச்செய்ய அளப்பெரும் சேவையாற்றிய  முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த போர்க்கால ஊடகவியலாளர்கள் 15பேர் இதன்போது மதிப்பளிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னங்களும், நினைவுப் பரிசிலும் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம்,  ஊடகவிரிவுரையாளர் அமிர்தநாயகம் நிக்ஸன்,  சட்டத்தரணிகளான வீ.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா ஆகியோர் கலந்துகொண்டதுடன்   அவர்களுக்கு  நினைவுச் சின்னங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.


Leave a Reply