37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !!

37 ஆயிரம் மெற்றிடக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று (சனிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிங்கப்பூர் முகவர் மூலம் வழங்கப்பட்ட குறித்த எரிபொரு அடங்கிய கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளையும் 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அதற்கான கொடுப்பனவை செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் குறிப்பாக இலங்கை மத்திய வங்கிக்கு உரிய கொடுப்பனவுகளை ரூபாயில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *