6 தமிழக மீனவர்களுக்கு 4 ஆம் திகதி வரை விளக்க மறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரிற்கு மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை காரைநகர் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு நாகை பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் முன் ஆயர் செய்யப்பட்டபோது ஆறு மீனவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலிலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *