தேசிய மட்ட சங்கீத குழு இசைப் போட்டியில் மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திருகோணமலை /மூதூர் கல்லடி மலை நீலியம்மன் வித்தியாலய மாணவிகள் 1ஆம் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இவ் தேசியமட்ட போட்டியானது இன்று (18) அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கும் மூதூர் வலயத்திற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கே பெருமை தேடித் தந்த மாணவர்களுக்கும், வழிப்படுத்திய ஆசியர்களுக்கும் பிரதேச மக்கள் மனம் நிறைவான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.