கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்…! இளைஞன் கைது…! samugammedia

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில்  வீடொன்றில் கஞ்சா இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று(20) கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய திடீர் சோதனையை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கிலோவும் 700 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  கஞ்சாவை  வேறு இடம் கொண்டு செல்வதற்காக முற்பட்ட இளைஞனையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட தடயப்பொருள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *