பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது விபரீதம்…! ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…!samugammedia

பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பொல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அலவ்வவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றில் பயணித்த ஒருவர் பொல்கஹவெல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்கஹவெல – கந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *