கிறிஸ்துமஸ் தினத்தில் யாழில் மதுபானம்விற்ற மூவர் கைது…! பொலிஸார் அதிரடி…!samugammedia

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்கள் இன்றையதினம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மூவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி கலட்டி மற்றும் முலவை சந்திப்பகுதியில் நடாத்திய தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து 117 கால் போத்தல்களும் 9 பெரிய மதுபான போத்தல்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *