இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு , 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் , தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 61,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிவக்கப்படுகின்றது.
இதேவேளை, மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 2,082 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.
அத்தோடு , மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 1,258 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.