இலங்கையில் இதுவரை 61,006 கைது: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு , 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் , தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 61,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிவக்கப்படுகின்றது.

இதேவேளை, மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 2,082 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

அத்தோடு , மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 1,258 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *