ரயில் சிற்றுண்டிச்சாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் – இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு..!samugammedia

புகையிரதங்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் அவசர பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷனக போபிட்டிய தெரிவித்துள்ளார்.

மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதை அவதானித்ததையடுத்து, சிற்றுண்டிச்சாலை அசுத்தமான முறையில் நடத்தப்படுவதை அவதானித்ததை அடுத்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மீனகயா ரயில் சிற்றுண்டிச்சாலை பெட்டியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *