இலங்கை கிரிக்கெட் மீதான தடை அடுத்த சில நாட்களில் நீக்கம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.

வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் பல காலமாக நடைமுறையில் இருந்த விடயம் யாவரும் அறிந்ததே. இத்தடை வெகு விரைவில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *