வடமாகாண பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் செயற்றிட்டம் முன்னெடுப்பு…!samugammedia

வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில்  ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் வடமாகாண  பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டு நாள் செயற்றிட்டம்  இன்று  யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணன் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு ஊடக சுதந்திர தொடர்பிலும், ஊடகவியாளர்களின் சமூக நோக்கம் தொடர்பிலான விளங்கங்களையும், அரசாங்கத்தின் வேலைத்திட்ட செய்தியினை பிரசுரித்தல் தொடர்பிலும், அறநெறி சார்ந்த அறிக்கையிடல் குறித்தும் விளக்கமளித்தார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.விஜய நாயக்க, சிறுவர் பிரிவின் சஞ்சீவவசத்துன குமாரி, ஊடக ஆய்வாளர் சதுரங்க கப்புக்கந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் உள்ளிட்ட 40 வடமாகாண ஊடகவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *