சிவனொளிபாதமலைக்கு தடையற்ற மின்சாரம்…!samugammedia

சிவனொளிபாதமலையில் தரிசனம் மேற்கொள்ளும்  யாத்திரிகர்கள் நலன் கருதி தங்கு தடையின்றி மின் இணைப்பு வழங்கும் திட்டம் நிறைவடைந்துள்ளது.
மின்சார சபையின் ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து கடந்த ஒரு மாதமாக புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக பணிகள் இடம்பெற்று தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் தெரிவித்தார்.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பின்னர் தங்குதடையின்றி சிவனொளிபாதமலைக்கு மின் வழங்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *