அதிவேக பயணம்..ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து..!!

இன்றைய தினம் புது குடியிருப்பு பகுதியில் கார் ஒன்று  மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில்  இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்,  முச்சக்கரவணடி என்பனவற்றை மோதி தள்ளியது.  

குறித்த இவ் விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக தர்ம புரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காரின் கீழ்ப்பகுதியில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள் துவிச் சக்கர வண்டி என்பனவற்றை மீட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *