பாராளுமன்ற உறுப்பினரானார் ஜகத் பிரியங்கர! சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

ஜகத் பிரியங்கர இன்று (08) பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் வெற்றிடமான ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளைஇ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08) இடம்பெற்று வருகின்றது..

குறித்த விவாதம் இன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த விவாதம் நாளையும் நடைபெறவுள்ளது.

இதன்போது அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் உள்ள முன்மொழிவுகள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *