பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2022 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 1,450 ரூபாய் என்ற கொடுப்பனவு 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த முறை திருத்தப் பணிகளில் பங்கேற்கவுள்ள பணிக் குழாமினருக்கு சகல சேவைகளுக்காக கடந்த ஆண்டு திருத்தப்பட்ட அடிப்படையில் கட்டணம் செலுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *