குழந்தைகளுக்கு தொல்லையா? 1929 உடன் அழைக்கவும்!

கடந்த ஆண்டு (2023) சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக 11,414 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

1929 சிறுவர் உதவி இலக்கம், ஜனாதிபதி செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகள் மின்னஞ்சல்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டு நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் துஷ்பிரயோகம் அல்லது வன்முறை இருந்தால் 1929 குழந்தை உதவி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தலைவர் கேட்டுக்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *