இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.