குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு உலகின் மிகவும் முன்னேறிய நாடுகள் பயன்படுத்தும் வழிமுறைகளை இலங்கை பொலிஸும் பின்பற்றும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் துறையின் குற்றப் பதிவுப் பிரிவின் கைரேகை அறிவியல் துறை பரீட்சையில் சித்தியடைந்த அதிகாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டே புதிய பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தனது பதவிக் காலத்தின் இறுதி நாள் இன்று. நாளை முதல் தனது புதிய கடமைகளை ஆரம்பிக்கவுள்ளேன் எனவும் அவர் கூறினார்.