வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து- ஸ்தலத்தில் பெண் பலி!

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பிலும் உயிரிழந்த பெண் தொடர்பிலும் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

பிரபாகரன் எங்கே? – பார்வதியம்மாவிடம் படையினர் ஏன் விசாரித்தனரென சிவாஜி கேள்விக்கணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *