![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/3-1.jpg)
“நாங்கள் கண்கள் கட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு பலவந்தமாக ஆடையினைக் களையச் செய்து இஸ்ரேலியப் படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டோம். அண்மையில் எமது வைத்தியசாலையில் இஸ்ரேலிய படைகளால் திடீரென தாக்குதல் மேற்கொண்டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்பட்டது” என காஸாவின் பலஸ்தீன நாசர் வைத்தியசாலை டாக்டர்கள் உட்பட வைத்திய சேவையாளர்கள் தெரிவித்தனர்.