தேங்காய் திருடிய நபருக்கு பிணை

காலி, பெப்.22

30 தேங்காய்களை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

காலி – யடகல பகுதியில் உள்ள தமது காணியில் கடந்த சனிக்கிழமை தேங்காய்களை திருடியதாக அதன் உரிமையாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *