காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா

காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்திற்குள் அமெரிக்காவால் மீட்கப்பட வேண்டியவர்களில் இறுதியாக 1000 பேர் மட்டுமே உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இவர்கள் எப்போது அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது முடிவாகாத நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதில் ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க துருப்புகளும் படிப்படியாக வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது 4 ஆயிரத்திற்கும் குறைவான அமெரிக்க படையினர் மட்டுமே காபூல் விமான நிலையத்தில் உள்ளனர்.

இவர்களில் எத்தனை பேர் அமெரிக்கா திரும்புவார்கள், எத்தனை பேர் காபூலில் தொடர்ந்து இருப்பார்கள் என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *