PCR அறிக்கைகளை போலியாக தயாரித்த மூவர்! விசாரணையில் அம்பலமான உண்மை

வெளிநாடுகளுக்கு செல்வோருக்காக போலி PCR அறிக்கைகளை தயாரித்த மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய – மினுவாங்கொடை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 33 மற்றும் 28 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் போலியாக PCR அறிக்கைகளை தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *