நாடு கடந்த இரண்டு வருடங்களில் பாரிய அழிவை சந்தித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு பாரியளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாம் கடந்த ஐந்து வருடங்களில் நாட்டின்; பொருளாதாரத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வந்தோம்.
அதுமட்டுமன்றி நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொடுத்தோம். மருந்துகளின் விலையில் நிலை தன்மையை பேணி மிகவும் குறைந்த விலைக்கு அவற்றை பெற்றுக்கொடுத்தோம்.
எரிபொருள் விலையை குறைத்து அதற்கான பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். நாட்டை பொருளாதார ரீதியில் மிகச் சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு சென்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.